பெட்டி பெட்டியாக இலங்கைக்கு கடத்த முயன்ற அதிர்ச்சி பொருள்

x

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் ஏற்றப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரை பெட்டிகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்... புதுமடம் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்கு தயார் நிலையில் இருந்த படகு ஒன்றை சோதனை செய்த போது அந்த படகில் 12 பெரிய பெட்டிகளில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்துள்ளன... போலீசார் படகை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்து பெரிய பட்டினத்தை சேர்ந்த முகமது மீராசா என்பவரை கைது செய்தனர்... விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பதிவு எண் இல்லாத படகை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்