போலீசாரையே மிரள வைத்த நடிகரின் மனைவி.. பிரமை பிடித்ததற்கு பின்னால் பகீர் ட்விஸ்ட்

x

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை விஸ்வாஸ் நகர் அருகே, 6 லட்ச ரூபாய் கந்து வட்டிக்கு வாங்கிய கடனை திரும்பத் தராத மாலதி என்பவரை, ஏபி நகரை சேர்ந்த உமாராணி என்பவர் கடத்தி வைத்து கொடுமைப்படுத்துவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில், துணை நடிகரின் மனைவியான மாலதியை, காந்தி மார்க்கெட் போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மாலதி பல பேரிடம் பல கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இந்த நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி, திருச்சி பெண் ஆடிட்டர் சீதா மனோகரன் என்பவரிடம் ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரால் மாலதி கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்