தூய்மையான மாநகரத்திற்கான விருது பெற்ற திருச்சி... மேயர் சொன்ன முக்கிய தகவல்

x

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்த‌தால் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என்ற விருது பெற முடிந்த‌தாக மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என்ற விருதை, டெல்லி சென்று மேயர் அன்பழகன் பெற்று வந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்சனை இல்லாமலும், குப்பை இல்லாத, கழிவுநீர் தேங்காத வகையில் மாநகராட்சியை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். பொதுமக்களின் ஒத்துழைப்பு, தூய்மைப் பணியாளர்களால்தான் விருது கிடைத்த‌தாக தெரிவித்த‌ மேயர், தேசிய அளவில் விருது பெறுவது இலக்கு என்றார்.


Next Story

மேலும் செய்திகள்