வலுக்கட்டாயமாக பணம் பறித்த திருநங்கைகள்-எதிர்த்து கேட்டவருக்கு நேர்ந்த சோகம்..பரிதாபமாக பறிபோன உயிர்

x

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து ரமேஷ் என்ற இளைஞரும், அவரது நண்பரும் வேலை நிமித்தமாக திருப்பூர் செல்ல கும்பகோணம் பேருந்து நிலையம் வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த திருநங்கைகள் சிலர் ரமேஷிடம் வலுக்கட்டாயமாக பணம் பறித்ததாகவும், இதைத் தட்டிக்கேட்டு ரமேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே, சிலரை தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்த திருநங்கைகள், அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. சிறுது நேரத்தில் பேருந்து நிலையம் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், ரமேஷை கண்மூடித்தனமாக தாக்க ஆரம்பித்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆனைக்கார பாளையத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்