கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பதறவைக்கும் பின்னணி

x

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், காய்ச்சலுடன் வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. திருவள்ளூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணான பாரதி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். கர்ப்பிணி வார்டில் பாரதியை விட்டுவிட்டு, அவரது கணவர் உடைகளை எடுத்து வருவதற்காக வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், பாரதியிடம் விவரத்தை கேட்ட செவிலியர்கள், அவரை தரையில் அமர வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்