27 மாணவிகள், 4 வார்டன்களுக்கு நேர்ந்த சோகம் - பிரபல கல்லூரி ஹாஸ்டலில் பரபரப்பு

x

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி விடுதி ஒன்றில் உணவு சாப்பிட்ட மாணவிகள் உள்பட 31 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சத்திரம்பேருந்து நிலையம் அருகே இயங்கும் தனியார் கல்லூரி விடுதியில் இரவு விநியோகம் செய்யப்பட்ட உணவானது மாணவிகளுக்கு நஞ்சாக மாறி உள்ளது. இதன் காரணமாக 27 மாணவிகள், 4 விடுதி கண்காணிப்பாளர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 31 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 பேர் சிகிச்சை முடிந்து விடுதி திரும்பிய நிலையில், 16 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவு பிரச்சினையால் உடல் உபாதையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்