மகளின் பிறந்த நாள் விழாவுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம் - ரயில் மோதி இரண்டு பெண்கள் உயிரிழப்பு

x

மகளின் பிறந்த நாள் விழாவுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம் - ரயில் மோதி இரண்டு பெண்கள் உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் மோதி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திருவொற்றியூரை சேர்ந்த தம்பதியர் ரவிச்சந்திரன்- சக்தி. இவர்கள் தன் குழந்தையின் பிறந்தநாளுக்காக வருகை தந்த தங்களின் உறவினரை அழைப்பதற்காக திருவொற்றியூர் இரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இரவு 10 மணியளவில் உறவினர்கள் ராஜேஸ்வரி மற்றும் ஜெயாவுடன் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்கையில், எதிர்பாராத விதமாக இரயில் வந்துள்ளது.

இதில் சிக்கிய ராஜேஸ்வரியும், அவரை காப்பாற்ற சென்ற சக்தியும் சம்பவ இடத்திலேயே இரயில் மோதி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஜெயாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்