போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - 900 மாணவிகள் பேரணியில் பங்கேற்பு

x

சென்னை மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மணலி போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடைபெற்றது.. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக ஆவடி சரகம் போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.. தொடர்ந்து நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியில் 900 மாணவிகள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பியும் பேரணி சென்றனர்..


Next Story

மேலும் செய்திகள்