பாலத்தின் அருகில் கடை நடத்தும் வியாபாரிகள்..அடிக்கடி விபத்துகள் நடப்பதாக புகார்

x

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பிரதான சாலையின் பாலத்தின் அருகில் வியாபாரிகள் கடை நடத்துவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் முதன்மைச் சலையில் உள்ள பாலத்தின் இருபுறமும், காலை, மாலை நேரங்களில் வியபாரிகள் கடை வைத்து வியபாரம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சாலை விபத்துக்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே, ஆற்றுப்பாலத்தை அகலப்படுத்தி, வியாபாரிகளுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்