விமானம் மீது மோதிய டிராக்டர்... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

x

சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கு, சிறிய ரக விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த விமானம் நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது பயணிகளின் உடமைகளை ஏற்றி செல்லும் டிராக்டர், அதன் மீது மோதியுள்ளது. இதில், விமானத்தின் படிக்கட்டு பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சேதம் அடைந்த பகுதியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, சென்னை- திருச்சிக்கு இடையான விமான சேவை இன்று வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, விமானத்தில் டிராக்டர் மோதியது குறித்து உரிய விசாரணை நடத்த, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்