காணும் பொங்கல் கொண்டாட்டம்.. மக்கள் கடலால் நிறைந்த சுற்றுலா தலங்கள்

x

காணும் பொங்கலையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது..

காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் கூடினர்.

சென்னை மட்டுமின்ற வெளி மாவட்ட மக்களும் அதிகளவில் திரண்டு வந்திருந்தனர். நண்பர்களுடன் மற்றும் குடும்பம் குடும்பமாக வந்திருந்த மக்கள் கடற்கரை மணல் பரப்பில் விளையாடியும், உணவருந்தியும், உற்சாகமாக கொண்டாடினர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மெரினா கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், மெரினா கடற்கரை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிப்பு கோபுரங்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்