இன்றும்.. நாளையும்.. கனமழை, மிக கனமழை - வானிலை மையம் கொடுத்த அலர்ட்

x

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..

அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளைய தினம் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கையில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்து. மேலும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்