தமிழகத்திற்கு வந்தது அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை

x

கனமழை காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரிக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை 10 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்