"மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு.." ஆளுநர் ரவி போட்ட உத்தரவு | RN Ravi

x

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலத்தை மேலும் ஓரு ஆண்டுக்கு நீட்டித்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2021 ஆம் ஆண்டு செல்வம் நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. ஐந்தாம் தேதியிலிருந்து புதிய துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், துணைவேந்தர் செல்வத்தின் பதவிக் காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்வம் பணியாற்றுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்