கடலில் சீதோஷ்ண நிலை மாற்றம் - மீன் வரத்து குறைந்ததால் மீனவர்கள் கவலை

x

ராமேஸ்வரம் கடலில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மீன்வரத்து குறைந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றுவிட்டு கரை திரும்பிய மீனவர்களுக்கு, மீன்கள் மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளது. மீன்பிடி தொழிலுக்கு செய்த செலவிற்கு கூட வருவாய் கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்தனர். கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், மீன் வரத்து குறைந்துள்ளதாக அவர்கள் கூறினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்