உறுதியளித்தவுடன் ஈபிஎஸ் கேட்ட கேள்வி - சுடசுட பதில் சொன்ன துரைமுருகன்

x

அத்திக்கடவு - அவிநாசி திட்ட தொடக்க விழா விரைவில் நடைபெறும் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், பெரும்பாலான பணிகள் முடிந்து, ஒரு சில இடங்களில் பைப் இணைப்பு நடந்து வருவதாகவும், விரைவில் அத்திக்கடவு - அவிநாசி திட்ட தொடக்க விழா நடைபெறும் என்றும் உறுதியளித்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 100 ஏரிகளுக்கு நீர் ஏற்றும் திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாகவும், தற்போது இந்த திட்டம் சுணக்கமாக செயல்பட்டு கொண்டிருப்பதால் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்