நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய துணிந்த சிறுவன் - தி.மலையில் அதிர்ச்சி

x

திருவண்ணாமலையில், நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் இவரது நண்பர் அருண்குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மணிகண்டனை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய அருண்குமார் முடிவு செய்துள்ளார். இதற்காக அருண்குமார், தினேஷ், தீபன் மற்றும் ஒரு சிறுவன் என நான்குபேரும் ஒன்று கூடி, மணிகண்டன் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் மணிகண்டன் சிறு காயங்களுடன் தப்பித்தார். இந்நிலையில், 4 பேரையும் கைது செய்த போலீசார், 3 பேரை வேலூர் சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்