சாலையில் செல்போன் பேசி சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி...அடுத்த நொடி என்ன நடந்தது? பரபரப்பு வீடியோ

x

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வடமாநில தொழிலாளியின் செல்போனை பறித்துச் செல்ல முயன்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தினக்குமார் என்பவர் சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், அவரது செல்போனை பறித்துச் செல்ல முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர், அவர்களது இருசக்கர வாகனத்தை பிடித்தபடி துரத்திச் சென்றார். இதைத் தொடர்ந்து, செல்போனை திருடிய நபர்கள் அதனை வீசிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்