1 மாதமாக பள்ளி பாத்ரூமை சுத்தம் செய்த மாணவிகள் - வைரலாகும் வீடியோ.. அதிரடி ஆக்‌ஷன்

x

தாராபுரம் அருகே உள்ள குமார பாளையம் நடுநிலைப்பள்ளியில், கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஆறாம் வகுப்பு படிக்கின்றனர். இவர்களை பள்ளியின் தலைமையாசிரியரான இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி இருக்கிறார்கள். சிறுமிகளும் கடந்த ஒரு மாதமாக கழிவறையை சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் விளையாட்டாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தலைமையாசிரியர் உட்பட இரண்டு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தலைமையாசிரியரான இளமதி ஈஸ்வரன், இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்