புதைத்த உடலை தோண்டி எடுத்த போலீஸ் - கிடைத்த உண்மையால் மிரண்ட ஊர்மக்கள்

x

புதைத்த உடலை தோண்டி எடுத்த போலீஸ் - கிடைத்த உண்மையால் மிரண்ட ஊர்மக்கள்

மடத்துக்குளம் அருகே புதைக்கப்பட்ட நபரின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்து, அவரை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த துர்க்கேஸ்வரன், வீட்டின் முன் முறையில் இறந்து கிடந்துள்ளார். அதிக மது போதையால் அவர் இறந்திருக்கலாம் என நினைத்த உறவினர்கள், உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்தசூழலில் வேடப்பட்டியின் கிராம நிர்வாக அலுவலர், துர்க்கேஸ்வரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாரளித்துள்ளார். இதனையடுத்து, துர்க்கேஸ்வரனின் உடல் தோண்டு எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது தலையில் பலத்த காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராமேஸ்வரன் என்பவர் முன்விரோதம் காரணமாக துர்க்கேஸ்ரனை தாக்கி கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்