"ஆர்டிஓ இல்ல.. ஆர்டிஓ மாரி .." -பந்தாவாக ஏமாற்றிய சீட்டிங் Couple-போலீஸ் தீவிர விசாரணை

x

திருப்பூரை சேர்ந்த கவிதா என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ ஆக வேலை செய்து வருவதாகவும், தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். கேட்கும் பணத்தை கொடுத்தால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியதை நம்பி, பாமா என்பவர் 10 லட்சம் ரூபாய் பணத்தை, கவிதா மற்றும் அவரது கணவர் ராஜ்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், தம்பதி இருவரும் இதே பாணியில் பலரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியது தெரியவந்ததை அடுத்து, பணம் கொடுத்த பாமா அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், தம்பதி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தம்பதி இருவர் மீதும் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்