கால்வாயில் குளிக்க சென்று வீடு திரும்பாத சிறுமிகள் - காத்திருந்த பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி செய்தி

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, ஆழியாறு பாசன திட்ட கால்வாயில் குளிக்க சென்ற இரு சிறுமிகள் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்காலில் கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், திருப்பூரை சேர்ந்த இரு சிறுமிகள் மற்றும் சந்தோஷ் என்ற இளைஞரும் வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர். இதில், நீரில் அடித்து செல்லப்பட்டு மூவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மூவரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்