தானாக வந்து வீணாக மாட்டிய கவுன்சிலர் காவல் நிலையத்தை சுற்றி வளைத்த பாஜக தொண்டர்கள்

x

திருபத்தூர் அருகே பாஜக கவுன்சிலர் கைதை கண்டித்து பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த பாஜக கவுன்சிலர் குருசேவ், தனது காரில் கொண்டு சென்ற பதாகைகளுக்கு உரிய ஆணவனங்களை காண்பிக்குமாறு தேர்தல் பறக்கும் படையினர் கூறியுள்ளனர். அப்போது, அதிகாரிகளுடன் குருசேவ் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். இதையடுத்து, திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்