கல்லூரி மைதானத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர் - திருப்பத்தூரில் பரபரப்பு

x

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் காவல் துறையின் அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த ரத்னா ஜெயின் என்பவர், தனது மகனுக்கு ஏலகிரி மலையில் திருமணம் நடத்தியுள்ளார். புதுமணத் தம்பதியை அழைத்துச் செல்வதற்கு பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர், ஏலகிரியில் உள்ள கல்லூரி வளாகத்தில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த காவல் துறையினர், கல்லூரி நிர்வாகத்தை கடிந்து கொண்டதை அடுத்து, இதுபோன்று இனிமேல் நடக்காது என்று கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்தது. இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்