மக்கள் தேச கட்சி நிர்வாகி கொலை வழக்கு.. நீதிமன்றத்தில் ஐந்து பேர் பரபரப்பு வாக்குமூலம்

x

மக்கள் தேச கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விவேகானந்தனை, காவேரிப்பாக்கம் பகுதியில் வைத்து, ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் கோபி, ராஜேஷ், தாமோதரன், சந்துரு, சூர்யா என 5 பேர் திருப்பத்தூர் மாவட்ட ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இரவு சரணடைந்துள்ளனர். அப்போது, சரணடைந்த ராஜேஷ் என்பவரின் சகோதரர் இளவரசனை விவேகானந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்ததாகவும், அதற்கு பழிதீர்க்கும் வகையிலே விவேகானந்தனை கொலை செய்ததாக ஐவரும் வாக்குமூலம் அளித்த நிலையில், அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்