போன வாரம் மழை வெள்ளம் - இந்த வாரம் பக்தர் வெள்ளம் - இயல்பு நிலைக்கு திரும்பிய கோவில்

x

திருச்செந்தூரில் இயல்பு நிலை திரும்பியதால் சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. அந்த வகையில் திருச்செந்தூரிலும் வெள்ளம் சூழ்ந்ததால், பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் இயல்பு நிலை திரும்பியதால், 6 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் இருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்