30 அடிக்கு மேல் எழும்பும் அலை - சுற்றுலா பயணிகளுக்கு தடை

x

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது... சுமார் 30 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் கடலலை எழுந்து, முகுந்தராயர் சத்திரத்தில் உள்ள பாலத்தில் மோதுவதைக் காண முடிகிறது... இதனால் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் புகைப்படம் எடுக்க செல்ல வேண்டாம் என தடை விதித்துள்ள போலீசார், முள்வேலிகளைக் கொண்டு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்