தமிழக வீரரின் வாழ்வை தலைகீழாக்கிய வெள்ளம்... . மொத்தத்தையும் இழந்த குடும்பம் - கதறும் பெற்றோர்

x

தூத்துக்குடியில் பெய்த வரலாறு காணாத மழையில் தமிழ் தலைவாஸ் அணியில் ஆடிவரும் கபடி வீரர் மாசானமுத்துவின் இல்லம் முற்றிலும் சேதம் அடைந்ததால் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

முத்தையாபுரத்தில் உள்ள மாசானமுத்துவின் இல்லம் கனமழை வெள்ளத்தால் தரைமட்டமாகியுள்ளது. வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், மாசானமுத்துவின் சான்றிதழ்களும் வெற்றிக்கோப்பைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மாசானமுத்துவின் குடும்பத்தினர் அருகில் உள்ள பள்ளியில் தங்கியுள்ளனர். வீடு முழுமையாக இடிந்து இருப்பதால் புதிய வீடு கட்டித் தர வேண்டும் என்றும் தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் கபடி வீரர் மாசானமுத்துவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்