வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி - தனியார் மருத்துவமனைகளுடன் கைகோர்த்த அரசு

x

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, மருத்துவ முகாமினை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க எம்.பி. கனிமொழி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும், 3 ஆயிரத்து 331 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 1 லட்சம் பேருக்கும் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் 911 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 57ஆயிரம் பேர் இதுவரை சிகிச்சை பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்