ஒரே பெண்ணை காதலித்த தந்தை.. மகன் - குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த கொடூரம்

x

கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு 2 திருமணங்கள் நடைபெற்ற நிலையில், முதல் மனைவி 23 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கிறார். முதல் திருமணத்தில் சுபாஷ் என்ற மகன் ஒருவரும் இருந்த நிலையில், இரண்டாவதாக திருமணம் முடித்த பாலசுப்பிரமணியணனுக்கு 3 மகன்கள் பிறந்துள்ளனர். இதனிடையே, சரஸ்வதி என்ற பெண்ணுடன் பாலசுப்பிரமணியனுக்கு மூன்றாவதாக தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்பெண் ஏற்கனவே பாலசுப்பிரமணியனின் முதல் மனைவிக்கு பிறந்த மகனுடன் தொடர்பில் இருந்து வந்த நிலையில், இது பாலசுப்பிரமணியனுக்கு தெரியவர தந்தை மகனுக்குமிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, தந்தை மகனுக்கிடையே சொத்து தகராறும் இருந்து வந்ததால் இருவருக்கும் இடையேயான இந்த மோதல் முற்றியிருக்கிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில், தன் மகன் சுபாஷை அடித்துக் கொன்ற பாலசுப்பிரமணியன், அருகில் உள்ள கிணற்றில் மகனின் உடலை வீசிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்