தமிழகத்தின் மெயின் ஸ்டார் தொகுதியில் பணப்பட்டுவாடா?இரவோடு இரவாக அதிரடி ரெய்டு

x

தமிழகத்தின் மெயின் ஸ்டார்

தொகுதியில் பணப்பட்டுவாடா?

இரவோடு இரவாக அதிரடி ரெய்டு

தூத்துக்குடி அருகே, தொழிலதிபர் வீட்டில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு போலீசார் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மட்டகடை அருகே உள்ள வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரது வீட்டில், அரசியல் கட்சிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்