தாய்மார்களை குலை நடுங்க வைத்தவர்கள் -குழந்தைகளை கடத்தியது இவர்கள் தான் -வெளியான திடுக்கிடும் பின்னணி

x

தூத்துக்குடி அந்தோணியார் கோயில் அருகே, சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் 4 மாத குழந்தையை சில நாட்கள் முன்பு மர்ம நபர்கள் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, குழந்தை கடத்தலில் ஈடுபட்டது தூத்துக்குடி, ஆலங்குளத்தை சேர்ந்த கருப்பசாமி மற்றும் ராஜன் என்பது தெரியவந்தது. இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்ட போலீசார், இருவர் குறித்தும் தகவல் தெரிவித்தால் உரிய சன்மானம் வழங்குவதாகவும் அறிவித்திருந்த நிலையில், இருவரையும் கைது செய்திருக்கின்றனர். விசாரணையில், தூத்துக்குடியில் மாயமான 4 மாத பெண் குழந்தை மட்டுமின்றி, திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டனம் ஆகிய பகுதிகளில் இருந்து இருவரும் 4 குழந்தைகளை திருடியது தெரியவந்தது. கடத்தப்பட்ட குழந்தைகளை குழந்தை இல்லாதவர்களிடம் பல லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது தெரியவர, நான்கு குழந்தைகளையும் மீட்ட போலீசார், குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்