ட்யூட்டி முடிஞ்சா என்ன? ..கைக்குழந்தையுடன் கடமையை செய்த காவலர் - வைரலாகும் நெகிழ்ச்சி காட்சிகள்

x

திருவாரூரில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு போக்குவரத்தை சீர்செய்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவாரூர் நகர காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணிபுரியும் மணிகண்டன், தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு பொருட்கள் வாங்க கைக்குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது, விளமல் கல்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைப் பார்த்த காவலர் மணிகண்டன், உடனடியாக போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கைக்குழந்தையுடன் அவர் போக்குவரத்தை சரிசெய்த காட்சிகள் வைரலான நிலையில், அவரை நேரில் அழைத்து திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார் பரிசளித்து பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்