கணவர் வீட்டில் கரிக்கட்டையாய் கிடந்த மகள்.. - பெற்றோர் தலையில் இறங்கிய இடி..

x

திருவண்ணாமலையில், திருமணமான பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தில், கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போளூர் பகுதியை சேர்ந்த சந்தியா - சீனிவாசன் தம்பதிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், கணவன் வீட்டில் வரதட்சணை கேட்டு சந்தியாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த வாரம் சந்தியா, கணவர் வீட்டில் தீயிட்டு எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, சந்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை பங்களாமேட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், சந்தியாவின் கணவரான சீனிவாசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்