100% வாக்குப்பதிவு - மாராத்தான் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்

x

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை துவங்கிவைத்து மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியனும் தொடர்ந்து ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அரசுப் பள்ளி விளையாட்டு திடலில் கைப்பந்து, கூடைப்பந்து விளையாடிய ஆட்சியர், தேர்தலில்100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்