தாய் முன்னே மகனை கடத்திய கும்பல் - கண்ணீர் விட்டு கதறியும் விடாத சோகம்

x

திருத்தணியை சேர்ந்த வெங்கடமுனி என்பவர், தனது தாயுடன் சேர்ந்து மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீடு திரும்பியபோது, அவ்வழியாக காரில் வந்த மர்மநபர்கள் 4 பேர், கத்தி முனையில் அவரை கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக வெங்கடமுனியின் தாய் லட்சுமி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கார்த்திக் என்பவர் வெங்கடமுனியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், பல முறை பணம் கேட்டு தராததால், ஆத்திரமடைந்த கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனிடையே, கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்