நண்பனுக்காக இறங்கிய கும்பல்... கத்தியால் சரமாரியாக தாக்கும் பகீர் வீடியோ

x

சென்னையை அடுத்த ஆவடி திருமுல்லைவாயலை சேர்ந்த மணிகண்டன் என்பவரை, வெங்கட் மற்றும் அவரது நண்பர் கத்தியால் வெட்டி செல்போன் பறிக்க முயன்றுள்ளனர். இதில் வெட்டுக்காயங்களுடன் தப்பிய மணிகண்டன், தனது நண்பர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். தொடர்ந்து, பழிவாங்கும் விதமாக வெங்கட்டை துரத்திச் சென்ற மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் பட்டா கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் காயமடைந்த வெங்கட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்