பெண் ஊராட்சி மன்றத் தலைவரை ஆபீஸ் புகுந்து தாக்கிய கும்பல்.. வெளியான சிசிடிவி.. திருவள்ளூரில் பரபரப்பு

x

கும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து தலைவரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவி அஸ்வினியின் தந்தை சுகுமாரன் தெரிவித்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவரான அஸ்வினியை, 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஊராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்க முயற்சித்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவரின் தந்தையான சுகுமாரன், அவரது கார் ஓட்டுநரான ரவிக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்