பள்ளி மாணவனுக்கு அரிவாளால் வெட்டு-காப்பாற்ற முயன்ற அலுவலக பெண் ஊழியர்-நூலிழையில் தப்பிய உயிர்

x

திருவள்ளூர் அருகே, தனியார் பள்ளியில் புகுந்து, மாணவன் மற்றும் அலுவலகப் பெண் ஊழியர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மணவாள நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்குள் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், 11-ஆம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டினர். இதில் அந்த மாணவனுக்கு, கை மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்ட நிலையில், அதனை தடுக்கச் சென்ற பெண் ஊழியர் ஜெனிபர் என்பவரையும் அந்தக் கும்பல் அரிவாளால் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்