கணவரின் கள்ளக்காதலியை கண்டித்த மனைவி - கைவிட மறுத்ததால் கத்திக்குத்து

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டபட்டி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வள்ளி. இவருடைய கணவர் இறந்தநிலையில், தன் இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் அதே கிராமத்தை சேர்ந்த சௌந்தரி என்பவரின் கணவர் ஆறுமுகம் என்பவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த ஆறுமுகத்தின் மனைவி சௌந்தரி நேற்று வள்ளியின் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில், சௌந்தரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வள்ளியின் கழுத்தில் குத்தினார். அக்கம்பக்கத்தினர் வள்ளியை மீட்டு டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சௌந்தரி

அம்பலூர் காவல் நிலையத்தில் கத்தியுடன் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்