"இன்னும் பயிற்சி தேவையோ..!" - திருட தெரியாமல் சிக்கிய திருடன் - மதுரையில் நடந்த சுவாரஸ்யம்

x

மதுரை, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அன்றிரவு வழக்கம்போல் கோயிலை ஊழியர்கள் நடை சாத்தியுள்ளனர். அப்போது, கோயில் வளாகத்துக்குள் பதுங்கி கொண்ட மர்மநபர் ஒருவர், காலையில் நடை திறந்ததும் தப்பித்து ஓட முயன்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை கையும், களவுமாக பிடித்து ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மதுரை, நெல்லையப்பபுரத்தை சேர்ந்த அந்த நபர், கோயில் உண்டியலில் இருந்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியது தெரியவர அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மைக் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் தனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதெனவும், குடும்ப வறுமையின் காரணமாக திருட வந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்த நிலையில், அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்