இந்த ஆண்டும் தைப்பூசத்தில் இதற்கும் தடை முருக பக்தர்களுக்கு வெளியான தகவல்

x

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குரு சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்றனர். அப்போது பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துறைத்தனர். தைப்பூச திருவிழாவிற்காக120க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், 700க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சாதி ரீதியிலான கட்சி கொடிகளையோ அல்லது பனியன்களையோ அணிந்து வரக்கூடாது என காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த ஆண்டும் சர்ப்ப காவடி கொண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்