திருட்டு கணவன்.. காதல் மனைவி..கண்மாயில் கிடந்த ஆண் சடலம் - கடத்தல் ஸ்கெட்ச்சில் சிக்கிய கார் டிரைவர்

x

மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்தவர் முருகன். 68 வயது முதியவரான இவர், மதுரையில் வாடகை கார் ஓட்டி வந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி மதுரை ரயில் நிலையம் வந்திறங்கிய மூவர், குற்றாலம் செல்ல வேண்டுமென கூறி முதியவரை சவாரிக்கு அழைத்துள்ளனர். இதன்படி, மூவருடனும் காரில் புறப்பட்ட முருகன், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சோழங்குளம் கண்மாயில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரை சேர்ந்த ருக்சனா பர்வீன் என்பவர், தன் மகள் கடத்தப்பட்டதாக கூறி போலீசில் புகாரளித்திருக்கிறார். இதில், தன் மகளை அவரது கணவரே நண்பர்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றதாக ருக்சனா பர்வீன் வாக்குமூலம் அளித்த நிலையில், ருக்சனா பர்வீனின் மகள் கடத்தப்பட்ட கார்... தற்போது கொலை செய்யப்பட்ட முதியவரின் வாடகை கார் என்பதை விசாரணையில் கண்டறிந்த போலீசார் அதிர்ந்து போயினர்.


Next Story

மேலும் செய்திகள்