கண்முன் மாயாஜாலம்... நகைக்கடை ஓனரையே மிரளவிட்ட ஜோடி - என்னதான் அப்படி நடந்தது

x

கடையநல்லூர் நகைக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையில் , விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த அன்னலட்சுமி மற்று ஸ்ரீநாத் ஆகியோர் கணவன் மனைவி போல் நாடகமாடி நகைகளை நோட்டமிட்டு வந்துள்ளனர். இதில், இருவரும் 78 கிராம் பழைய நகைகளை கொடுத்து, 4 சவரன் புதிய நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணத்தை ரொக்கமாக வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இருவரும் சென்ற பின் நகைகளை சோதனை செய்த கடை உரிமையாளர் முகம்மது ரபீக், அவைகள் போலி என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். சிசிடிவி ஆதாரத்துடன் முகம்மது ரபீக் போலீசில் புகாரளித்த நிலையில், அன்னலட்சுமி மற்றும் ஸ்ரீநாத் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து இரண்டரை லட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்