நகைக்கடையில் கைவரிசை காட்டிய களவாணி.. வசமாக காட்டிக்கொடுத்த சிசிடிவி.. கையும் களவுமாக பிடித்த போலீஸ்

x

தென்காசியில் நகை வாங்குவது போல் நடித்து, நூதன முறையில், நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள சன்னதி பஜார் பகுதியில் அகமது மைதீன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த கடைக்கு வந்த 2 பெண்கள், நகை வாங்குவது போல் நடித்து, நூதன முறையில் நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த செல்வி என்ற பெண்ணை கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்