சாமி கும்பிடுவது போல் 2 கோவில்களில்.. கைவரிசை காட்டிய நபர்..வெளியான சிசிடிவி காட்சி

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அடுத்தடுத்து 2 கோயில்களில் சாமிகும்பிட்டு, திருடிய மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓமலூர் அருகே, சர்க்கரை செடிப்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்குள் சென்று, மர்மநபர் ஒருவர் கோவில் பொருட்களை திருடியுள்ளார். இதனையடுத்து, காடையாம்பட்டி அருகே உள்ள அம்மன் கோவிலில் சாமிகும்பிட்டு, அம்மனின் தாலியை பறித்து சென்றார். இந்த தொடர் திருட்டு சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்