சிறுமிகளை கேலி செய்த இளைஞர்கள்கைகலப்பில் இறங்கிய உறவினர்கள்.. குவிந்த போலீஸ்.. பாய்ந்த போக்சோ..

x

மேட்டூர் அருகே பள்ளி மாணவிகளை இளைஞர்கள் கேலி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில், 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கோட்டைமடுவு பகுதியில், சிறுமிகளை வேறு சமுதாய இளைஞர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும், கேலி செய்த இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த இருதரப்பினரும் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமிகளை கேலி செய்ததாக கூறப்படும் 4 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு பாய்துள்ளது. அதேபோல், இளைஞர்களை தாக்கியதாக கூறப்படும் 7 பேர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்