கழுத்தில் டாட்டூ குத்திய இளைஞர் துடிதுடித்து பலி | Tattoo | Perambalur

x

பெரம்பலூர் அருகே கழுத்தில் பச்சை குத்திய இளைஞர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

மூங்கில் பாடி கிராமத்தைச் சேர்ந்த தனுஷ்கோடி, பழனிச்சாமி தம்பதியினரின் மகன் பரத், கடந்த 20 நாட்களுக்கு முன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்ற போது, அங்கு கழுத்தில் பச்சை குத்திக் கொண்டதாக தெரிகிறது. சில நாட்களுக்குப் பின் பச்சை குத்திய இடத்தில், புண் ஏற்பட்டு சீழ்பிடித்துள்ளது. அதனை, அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அகற்றிய நிலையில், கடந்த திங்கட்கிழமை மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற பரத், அங்கேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே உறவினர்கள், அவரை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்...


Next Story

மேலும் செய்திகள்