பொண்ணு கேட்டு வந்த இளைஞர்! அடித்துக் கொன்று எரித்த தந்தை.. தட்டித்தூக்கிய போலீஸ்.. ஓசூரில் பரபரப்பு

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள நெல்லுமார் வனப்பகுதியில்.. கடந்த மாதம் 15 ஆம் தேதி, கர்நாடகாவின் கும்பாரதொட்டி கிராமத்தை சேர்ந்த நாகேஷ்குமார் என்ற இளைஞர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், கும்பாரதொட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகளை நாகேஷ்குமார் காதலித்து வந்ததும், அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி தொந்தரவு கொடுத்ததாலையே நாகேஷ்குமார் கொலை செய்யபட்டது தெரியவர, பெண்ணின் தந்தையான நாகராஜை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த அவரது நண்பர் பொம்மையாவை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில், கர்நாடகாவின் பெட்டஹள்ளி கிராமத்தில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்