விதவையை கர்ப்பமாக்கி கைவிட்ட இளைஞர்... சிசுவை விற்ற காதலன்... கதறிய பெண்; சிக்கிய `வில்லி' தோழி

x

கணவனை இழந்த பெண்ணை காதல் வலையில் விழ வைத்து கர்ப்பமாக்கிய இளைஞர், பிறந்த குழந்தையை விற்று, தப்பிக்க நினைத்த நிலையில், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் மாக்கனூரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு, திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், ஆம்பூரில் உள்ள ஷூ கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த அந்த பெண்ணுக்கும், உடன் பணியாற்றிய ஜீவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் கணவன் மனைவி போல் வசித்து வந்த நிலையில், பெண் கர்ப்பம் தரித்திருக்கிறார். இதில், பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையையும் அப்பெண்ணையும் இளைஞரின் வீட்டார் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், பெண்ணை கைவிட நினைத்த ஜீவா, திருமணமாகி குழந்தை இல்லாமல் தவித்து வந்த நாட்றம்பள்ளியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரிடம் குழந்தையை 2 லட்ச ரூபாய்க்கு குழந்தையை விற்றிருக்கிறார். இதன் பின் பெண்ணுடன் சேர்ந்து வாழ இளைஞர் மறுத்ததால் அதிர்ச்சியடைந்த பெண் போலீசில் புகாரளித்த நிலையில், இளைஞரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சட்டவிரோதமாக விற்கப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார், பெண்ணின் தோழி உட்பட நால்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்